• July 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘ஓரணி​யில் தமிழ்​நாடு' உறுப்​பினர் சேர்ப்பு இயக்​கம் மூலம் தமிழகம் முழு​வதும் 1 கோடியே 35 லட்​சத்து 43,103 பேர் இணைந்​துள்​ள​தாக திமுக தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த ஜூன் மாதம் மதுரை​யில் நடை​பெற்ற திமுக பொதுக்​குழு​வில், ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ முன்​னெடுப்பை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​தார். அப்​போது அவர் வாக்​குச்​சாவடிக்கு 30 சதவீதம் உறுப்​பினர்​களை திமுக​வில் சேர்க்க நிர்​வாகி​களுக்கு அறி​வுறுத்​தி​னார்.

தொடர்ந்​து, இதற்​காக செயலி​யும் உரு​வாக்​கப்​பட்​டது. அதன்​பின், ஜூலை 1-ம் தேதி இத்​திட்​டத்தை அறி​வித்த முதல்​வர் ஸ்டா​லின், ஜூலை 3-ம் தேதி சென்​னை, ஆழ்​வார்​பேட்​டை​யில் மக்​களை நேரடி​யாக சந்​தித்து தொடங்கி வைத்​தார். தொடர்ந்​து, கடந்த ஜூலை 10-ம் தேதி திரு​வாரூர் தொகு​திக்​குட்​பட்ட சன்​னதி தெரு​வில் முதல்​வர், மக்​களை நேரடி​யாக சந்​தித்​து, இத்​திட்​டத்​தில் உறுப்​பினர்​களை சேர்த்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *