
விழுப்புரம்: விழுப்புரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தில் மாணவர் சேர்க்கையை தொடங்காமல் இருந்த திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் விழுப்புரத்தில் இன்று (ஜூலை 17) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, “விழுப்புரத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திமுக ஆட்சியில் மூடப்பட்டது. பல்கலைக்கழகம் செயல்பட்டிருந்தால், மாணவர் சேர்க்கையில் பிரச்சினை எழுந்திருக்காது. ஜெயலலிதா பெயர்தான் பிரச்சினை என்றால், அம்பேத்கர் பெயரை வைக்க அதிமுக வலியுறுத்தியும் கேட்கவில்லை. ஆட்சி அதிகாரத்தில் மூடிவிட்டனர்.