• July 17, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிஹாரின் பாகல்​பூர் மாவட்​டத்​தில் உள்​ளது குல்​குலியா சைத்​பூர் கிராமம். இங்​குள்ள இளைஞர்​கள் போதை பொருள் பயன்​படுத்​து​வதைத் தடுக்க அதன் கிராமப் பஞ்​சா​யத்​தில் முடிவு எடுக்​கப்​பட்​டது. இந்த நடவடிக்கை துவங்​கும் முன்பு வரை வெளி ஆட்​கள் பலரும் இரவு நேரங்​களில் சந்​தேகத்​திற்கு இடமளிக்​கும் வகை​யில் வந்து சென்​றபடி இருந்​துள்​ளனர். இவர்​களைப் பற்றி விசா​ரித்த கிராமத்​தினர் அவர்​கள் போதை பொருள்​கள் விற்​பனை செய்​பவர்​கள் எனத் தெரிய​வந்​துள்​ளது.

எனவே, கிராமத்​தில் நுழைவதற்​காக இருக்​கும் ஒரே ஒரு சாலை​யில் மூங்​கில் தடுப்பை போட்டு மூடி வைத்​துள்​ளனர். இத்​துடன் அங்கு இரவு பகல் என 24 மணி நேர​மும் 2-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் காவல் பணி​யில் உள்​ளனர். கிராமத்தை கடந்து செல்​லும் வாக​னங்​கள் குறித்து விசா​ரித்து அவர்​களின் விவரங்​கள் ஒரு பதிவேட்​டிலும் எழுதி வைக்​கப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *