• July 17, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: ​நாம் தமிழர் கட்சி சார்​பில் ஆக.17-ம் தேதி மரங்​களின் மாநாடு நடை​பெறும் என்று அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி​னார். 2018-ல் திருச்சி விமான நிலை​யத்​தில் மதி​முக, நாம் தமிழர் கட்​சி​யினர் இடையே ஏற்​பட்ட மோதல் தொடர்​பான வழக்கு விசா​ரணை திருச்சி மாவட்ட 2-வது கூடு​தல் நீதி​மன்​றத்​தில் நேற்று நீதிபதி கோபி​நாத் முன்​னிலை​யில் நடை​பெற்​றது. இதில் சீமான் உள்​ளிட்​டோர் ஆஜராகினர். வழக்​கில், வரும் 19-ம் தேதி தீர்ப்பு அளிக்​கப்​படும் என நீதிபதி தெரிவித்தார்.

பின்னர், செய்​தி​யாளர்​களிடம் சீமான் கூறியது: விவ​சா​யிகள், ஆசிரியர்​கள் போராட்​டம் நடத்​திக் கொண்​டிருக்​கிறார்கள். பாஜக அரசின் கொள்​கை​களில் இருந்​து, திமுக அரசு எவ்விதத்​தி​லும் மாறு​பட​வில்​லை. டிஎன்பிஎஸ்சி தேர்வில் அரசியல் சார்ந்த கேள்விகள் கேட்கலாமா? மத்​தி​யில் கூட்​டணி ஆட்​சி​யில் பங்​குபெறும் திமுக, மாநிலத்​தில் கூட்​டணி கட்​சிகளுக்கு ஆட்​சி​யில் பங்கு தரு​வ​தில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *