
மயிலாடுதுறை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை நேற்று சிதம்பரத்தில் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கொள்ளிடம், சீர்காழி வழியாக மயிலாடுதுறை மாவட்டம் வந்தார். மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில் முதல்வருக்கு திமுக கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், கொள்ளிடம் புறவழிச் சாலையில் சோதியக்குடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கலச் சிலையை திறந்து வைத்து, கட்சிக் கொடியைஏற்றி வைத்தார்.