
கடலூர்: பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசு வழங்கும் சேவைகள் எளிமையாக கிடைத்திடும் வகையில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூலை 14) இரவு சென்னையில் இருந்து ரயில் மூலம் சிதம்பரம் வந்து தனியார் ஹோட்டலில் தங்கினார். இவருக்கு திமுக சார்பில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று (ஜூலை 15) காலை 9.30 மணிக்கு சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.