• July 15, 2025
  • NewsEditor
  • 0

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாத காரணத்தால் தீக்குளித்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை உயிரிழந்தார். இந்நிலையில், மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்க நான்கு பேர் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (யுஜிசி) அமைத்துள்ளது.

இந்த குழுவுக்கு புதுடெல்லியில் உள்ள குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ்குமார் மிட்டல் தலைமை வகிப்பார் என யுஜிசி தெரிவித்துள்ளது. முன்னாள் யுஜிசி உறுப்பினர் சுஷ்மா யாதவ் மற்றும் குஜராத் பல்கலைக்கழக துணைவேந்தர் நீர்ஜா குப்தா ஆகியோரும் இதில் இடம்பெற்றுள்ளனர். குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஆஷிமா மங்லா செயல்படுவார் என யுஜிசி அறிவித்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *