
ரஜினியிடம் கதை ஒன்றை கூறியிருக்கிறார் ‘மகாராஜா’ இயக்குநர். இதன்மூலம் இருவரும் இணைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மகாராஜா’. இப்படத்தை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்கள், நித்திலன் இயக்கத்தில் நடிக்க முன்வந்தார்கள். அவரோ தனது அடுத்த படத்துக்கான கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.