
சென்னை: தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் மேம்படுத்த வேண்டும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திராவிட மாடல் ஆட்சியில், பட்டியலின மக்கள் படும் துன்பங்கள் ஒன்றா இரண்டா? எதற்குதான் இதுவரை தீர்வு கிடைத்துள்ளது? தமிழகத்தில் 445 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ‘காலனி’ என்ற சொல்லை நீக்கப் போவதாக கூறி முதல்வர் ஒரு நாடகம் நடத்தினார். இப்போது சமூக நீதி விடுதி நாடகம் நடத்துகிறார்.