
சென்னை: நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
பிரதமர் மோடி: பிரபல திரைப்பட ஆளுமை பி. சரோஜாதேவியின் மறைவால் வருத்தம் அடைந்தேன். இந்திய சினிமா மற்றும் கலாச்சாரத்தின் ஒரு சிறந்த சின்னமாக அவர் நினைவுகூரப்படுவார்.அவரது பன்முகத்தன்மை கொண்ட நடிப்பு தலைமுறை தாண்டியும் அழியாத அடையாளத்தை ஏற்படுத்தி வருகிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி.