
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள சரோஜாதேவி, தனது 87 -வது வயதில் நேற்று காலமானார். அவருடைய சினிமா பயணம் பற்றிய விவரம் வருமாறு:
சரோஜாதேவி, 1938-ம் ஆண்டு ஜன.7-ம் தேதி மைசூரு அருகே சென்னபட்ணாவில் பிறந்தார். அவர் இயற்பெயர் ராதாதேவி. சினிமாவுக்காக சரோஜாதேவி ஆனார். இவர் தந்தை பைரப்பா போலீஸ் அதிகாரி. தாய் ருத்ரம்மா குடும்பத் தலைவி. இந்த தம்பதியின் 4வது மகளாக பிறந்த சரோஜாதேவி, தனது 17 வயதில், 1955-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘மகாகவி காளிதாசா’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.