
புதுடெல்லி: போதைப்பொருட்களை பயன்படுத்தாத இளையோர் என்ற கருப்பொருளில் 3 நாள் இளையோர் ஆன்மிக உச்சி மாநாடு வரும் 18-ம் தேதி வாராணசியில் தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா, "வளர்ச்சி அடைந்த இந்தியாவை வழிநடத்துபவர்களாக நமது நாட்டின் இளைஞர்கள் உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதத்துக்கும் அதிகமானோர் 35 வயதுக்குட்பட்டவர்கள். அதாவது சராசரியாக 28 வயதுடையவர்கள். இது நமது இளைஞர்களை தேசிய வளர்ச்சியின் உந்து சக்தியாக ஆக்குகிறது.