
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 13 வரை மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக மொத்தம் 98 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இமாச்சல் அரசு இன்று காலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் மழை, வெள்ள பாதிப்புகளில் சிக்கி 98 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில் 57 பேர் நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகள் போன்ற பேரிடர் பாதிப்புகளில் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 41 பேர் மழை காரணமாக ஏற்பட்ட சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.