
மதுரை: குமரி மாவட்டத்தில் தனியார் வனத்தில் ரப்பர் மரங்களை வெட்ட சட்டவிரோதமாக அனுமதி வழங்கிய வன அலுவலர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட்தாஸ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘குமரி மாவட்டத்தில் வன அலுவலர்கள் ஆனந்த், ஷாநவாஸ்கான், ஸ்ரீவல்சன் ஆகியோர் கடையல் வனப்பகுதியில் தனியார் வனத்தில் வளர்ந்துள்ள சுமார் 4000 ரப்பர் மரங்களை வெட்ட தனிநபர்களுக்கு சட்ட விதிகளை பின்பற்றாமல் அனுமதி வழங்கியுள்ளனர்.