
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தாடண்டர் நகர் அரசு ஊழியர் குடியிருப்பில் தூய்மைப் பணி சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார்.
சென்னை மாநகராட்சி, அடையார் மண்டலத்துக்கு உட்பட்ட 169-வது வார்டு, தாடண்டர் நகர் அரசு குடியிருப்பு பகுதி, 70.73 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு 1844 குடியிருப்புகள் உள்ளன. மேலும் 1500 குடியிருப்புகள் வரவுள்ளன. இவ்வளாகத்தில் தூய்மைப் பணி மற்றும் இதர பராமரிப்பு பணிகள் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.