
சென்னை: மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கு, கணக்கீட்டு கருவியை மின்வாரியமே கொள்முதல் செய்து தர வேண்டும் என, தமிழக மின்ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள 44 மின் வட்டங்களில், ஒவ்வொரு மின் வட்டத்துக்கும் 10 பிரிவு அலுவலகங்களை தேர்வு செய்து, அதில் பணிபுரியும் கணக்கீட்டாளர்கள் தங்களின் ஆன்ட்ராய்டு செல்போன்களை பயன்படுத்தி மின்வாரியத்தின் செயலியை பதிவிறக்கம் செய்து கணக்கீட்டு பணியை செய்ய மின்வாரிய தலைமை உத்தரவு பிறப்பித்தது.