
சென்னை: உயர்கல்வி தொடர்பாக ஆலோசனை வழங்கும் ‘டெக்னோகிராட்ஸ் இந்தியா காலேஜ் ஃபைண்டர்’ அமைப்பின் சார்பில், மறைந்த கல்வியாளர் மு.அனந்த கிருஷ்ணன் 97-வது பிறந்தநாள் நினைவு சொற்பொழிவு மற்றும் கல்வி உதவித்தொகை விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலை.
வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 3 பழங்குடியின மாணவர்கள் உட்பட 4 பேருக்கு கல்வி உதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.