
சென்னை: கடலூர் ரயில் விபத்து சம்பவம் எதிரொலியாக, இன்டர்லாக் செய்யப்படாத கேட்களில் விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்க முக்கிய நடவடிக்கைகளை எடுக்க தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் அறிவுறுத்தி உள்ளார். கடலுார் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வாகனம் மீது பயணிகள் ரயில் மோதிய சம்பவத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, லெவல் கிராசிங் பகுதிகளில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவது, இன்டர்லாக்கிங் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்படாத பகுதிகளில் உள்ள லெவல் கிராசிங் கேட்களை தினமும் ஆய்வு செய்வது உட்பட பல்வேறு உத்தரவுகளை ரயில்வே துறை பிறப்பித்துள்ளது.