• July 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கடந்த தேர்​தலைவிட இரண்டு மடங்கு தொகு​தி​களை பெறு​வ​தில் விசிக உறு​தி​யாக இருப்​ப​தாக கட்சி வட்​டாரத்​தினர் கூறுகின்​றனர். கடந்த 2021-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்ற விசிக 6 தொகுதிகளில் போட்​டி​யிட்டு 4 தொகு​தி​யில் வெற்றி பெற்​றது. இதைத் தொடர்ந்​து, நடை​பெற்ற மக்​கள​வைத் தேர்​தலில் 2 தனித்தொகு​தி, 1 பொதுத்​தொகு​திக்​காக கடுமை​யாக போ​ராடியது.

ஆனால், 2 தொகு​தி​களை மட்​டுமே திமுக ஒதுக்​கிய நிலை​யில், இரண்​டிலும் சொந்த சின்​னத் தில் போட்​டி​யிட்டு மாநில கட்சி என்னும் அங்​கீ​காரத்​தை​யும் பெற்​றது. இந்த அங்​கீ​காரத்தை தக்க வைக்க வேண்​டிய நிலை​யில் விசிக உள்​ளது. இதற்​காக குறைந்த​பட்​சம் 8 தொகு​தி​களில் வெற்றி பெற வேண்​டும். அப்​படி​யா​னால் இரட்டை இலக்​கத் தொகு​தி​யில் போட்​டி​யிடு​வது அவசியம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *