
சென்னை: காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வில் மொழி திறன் தேர்ச்சியில் இருந்து மின் வாரியம் விலக்கு அளித்துள்ளது. தமிழகத்தில் அரசு பணியில் உள்ளவர்கள் தமிழ் மொழி அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி. தற்போது டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் மொழி தாள் இடம்பெற்றுள்ளது.
அதில் தேர்ச்சி பெற்றால்தான் அடுத்தகட்ட தேர்வு நடைமுறைக்குச் செல்ல முடியும். ஆனால் டிஎன்பிஎஸ்சி-க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கும்போது தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.