
பெங்களூரு: கர்நாடகாவில் அடர் வனப்பகுதியில் உள்ள குகையில் ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் தங்கி இருந்தார். அவரை அம்மாநில போலீஸார் பத்திரமாக மீட்டனர். கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் கோகர்ணா அருகே ராமதீர்த்தா மலை அமைந்துள்ளது.
அங்குள்ள வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சட்டவிரோதமாக மலையேற்றம், சவாரி ஆகியவற்றில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.