
சென்னை: தமிழக மின் வாரியம் மின்சாரத்தை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு விநியோகம் செய்து வருகிறது. தமிழகத்தின் சொந்த மின் உற்பத்தி தவிர தேவைக்கு ஏற்ப வெளி மாநிலங்கள், வெளிச்சந்தைகளில் இருந்து கொள்முதல் செய்கிறது. உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும், கிரிட் எனப்படும் மின் கட்டமைப்பு மூலம் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.
மின் கட்டமைப்பின் பணிகள் சவாலானது என்பதால் அதற்கான முழுத்திறனில் செயல்பட வேண்டும் என்பதற்காக நிதி கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட 6 பணியிடங்களை உருவாக்கி மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.