
சென்னை: இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று (ஜூலை 14) முதல் தொடங்குகிறது. முதல் சுற்றில் 39,145 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 90,166 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு கலந்தாய்வில் பங்கேற்க 3.02 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 2 லட்சத்து 41,641 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தகுதிபெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியானது.