
புதுடெல்லி: மகாராஷ்டிராவின் 11 மராட்டிய கோட்டைகளை, உலக பாரம்பரிய சின்னம் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது.
உலகம் முழுவதும் பழங்கால கட்டிடங்களை ஆய்வு செய்து உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்து வருகிறது. அதன்படி மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி செய்த மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி ஆட்சி செய்த 11 கோட்டைகள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள செஞ்சி கோட்டை என மொத்தம் 12 கோட்டைகளை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரை செய்திருந்திருந்தது.