
சென்னை: இன்டர்லாக்கிங் செய்யப்படாத லெவல் கிராசிங் கேட்டுகளில் பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றவும், கோட்ட அளவில் குரல் பதிவை சரிபார்க்குமாறும் ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
கடலூர் செம்மங்குப்பத்தில் கடந்த 8-ம் தேதி பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த ரயில்வே கேட் இன்டர்லாக்கிங் செய்யப்படாமல் இருந்தது தெரியவந்துள்ளது. இதன் எதிரொலியாக, ரயில்வே லெவல் கிராசிங்-ல் பின்பற்ற வேண்டிய 11 நடைமுறைகளை இந்திய ரயில்வே துறை வெளியிட்டது. மேலும், 15 நாட்களுக்கு பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.