
சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் 11.48 லட்சம் பேர் பங்கேற்றனர். வினாத்தாள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். தேர்வு முடிவுகள் 3 மாதங்களில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர் உட்பட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு மாநிலம் முழுவதும் 3,034 மையங்களில் நேற்று நடைபெற்றது.