
திருவனந்தபுரம்: பாஜக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, அபிமானம் அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களிலும் பாஜக மாபெரும் வெற்றி பெறும்.மேற்கு வங்கம், கேரளா, தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாஜகவின் புதிய தலைமை அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்து வைத்தார். பின்னர், பாஜக நிர்வாகிகள், வார்டு தலைவர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியினரால் பாஜக தொண்டர்கள் கொல்லப்படுகின்றனர். நாம் நூற்றுக்கணக்கான தியாகிகளை இழந்துவிட்டோம். நமது கட்சியை ஆட்சியில் அமர்த்துவதுதான் நமது நோக்கம். வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக 21,000 வார்டுகளில் போட்டியிடும். 25 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று, பெரும்பாலான வார்டுகளில் பாஜக வெற்றி பெறும்.