
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் ராணுவ தளங்களாக இருந்த 12 கோட்டைகளில் ஒன்று தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டை. இந்த கோட்டையை யுனெஸ்கோ பிரதிநிதி ஹவாஜங் லீ ஜெகாம்ஸ் கடந்த 2024 செப்டம்பர் மாதம் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தார்.