
திருவனந்தபுரம்: பிரதமர் மோடி தலைமையிலான அரசு, முந்தைய காங்கிரஸ் அரசுகளை விட கேரளாவுக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய அமித்ஷா, “கேரளாவின் ஆளும் இடது ஜனநாயக முன்னணி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய இரண்டும் ஊழல் நிறைந்தவை. கேரள மாநிலத்தின் மீது மத்திய அரசு மாற்றாந்தாய் அணுகுமுறையோடு இருப்பதாகக் கூறுவது தவறு. மோடி தலைமையிலான மத்திய அரசு முந்தைய யுபிஏ அரசாங்கத்தை விட கேரளாவுக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது.