
புதுடெல்லி: வெளிநாடுகளின் நாடாளுமன்றங்களில் காங்கிரஸ் பிரதமர்களுக்கு இணையாக பிரதமர் நரேந்திர மோடி 17 உரைகளை ஆற்றியுள்ளார். இதற்காக தனது எக்ஸ் தளத்தில் பாஜக பெருமிதம் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் இதனைக் கடுமையாக விமர்சித்துள்ளது.
பிரதமர் மோடி சமீபத்தில் ஐந்து நாடுகளுக்கு விஜயம் செய்து, கானா, டிரினிடாட்&டொபாகோ மற்றும் நமீபியா நாடாளுமன்றங்களில் உரையாற்றினார். கடைசியாக நமீபியா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, அந்நாட்டு எம்பிக்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.