• July 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் சீலாம்பூர் பகுதியில் இன்று (ஜூலை 12) காலை சுமார் 7 மணி அளவில் நான்கு தலங்கள் கொண்டு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் வகையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சீலாம்பூர். இந்த பகுதியில் உள்ள ஜனதா மஸ்தூர் காலனியில் அமைந்துள்ள நான்கு தலங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்தது. இந்தத் தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர், காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *