
குவாஹாட்டி: அசாமில் திருமணம் ஆகாத 22 வயது பெண் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார். அசாமின் சிவசாகர் அரசு மருத்துவமனையில் திருமணம் ஆகாத 22 வயது பெண் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.
இந்த பச்சிளம் குழந்தையை அசாமின் சரைடியோ மாவட்டம் சபேகாதியை சேர்ந்த குழந்தையில்லாத ஒரு தம்பதிக்கு அப்பெண் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார்.