
சென்னை: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 405 சிறப்பு ஆசிரியர்களுக்கு பொது கலந்தாய்வு மூலம் விருப்ப மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,455 அரசுப் பள்ளிகள் உள்ளன. 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்படுகிறது.
அதன்படி, நடப்பு 2025-26-ம் கல்வி ஆண்டின் பொது மாறுதலுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 19-ல் தொடங்கி 25-ம் தேதியுடன் முடிவடைந்தது. மாநிலம் முழுவதும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்தனர்.