
இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு வந்து சேரும் ஈழத் தமிழர்கள் அங்குள்ள ஏதிலிகள் முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். அந்த நேரத்தில் ராஜீவ் காந்தி படுகொலை நடக்கிறது. குற்றவாளிகள் என அடையாளம் காணப்படும் சிவராசன், சுபா ஆகியோரைத் தேடத் தொடங்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு, ஏதிலிகள் பலரை, வேலூர் கோட்டை தடுப்புக் காவல் சிறையில் அடைத்து வைத்து விசாரணை என்ற பெயரால் துன்புறுத்துகிறது.
அப்படி அங்கு அழைத்துச் செல்லப்பட்ட மாறன் (சசிகுமார்), ராமேஸ்வரம் முகாமில் இருக்கும் தனது மனைவி (லிஜோ மோள்) மற்றும் மகளைப் பார்க்க முடியாமல் சித்ரவதைகளை அனுபவிக்கிறார். ஆண்டுகள் நகர, மாறனும் அவருடன் வேலூர் முகாமில் இருப்பவர்களும் சுரங்கம் தோண்டித் தப்பிக்கத் திட்டமிடுகின்றனர். அவர்களால் முடிந்ததா என்பது கதை.