
குருகிராம்: ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ். இவர் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி வந்தார். குருகிராமின் சுஷாந்த் லோக் பகுதியில் இவர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் வீ்ட்டில் ராதிகாவை அவரது தந்தை தீபக் யாதவ் (49) துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார்.
இதுகுறித்து குருகிராம் காவல் துறை செய்தித் தொடர்பாளர் சந்தீப் குமார் கூறுகையில், “விசாரணையில் மகளை சுட்டுக்கொன்றதாக தீபக் ஒப்புக்கொண்டுள்ளார். உரிமம் பெற்ற ஒரு துப்பாக்கியை கைப்பற்றியுள்ளோம். ராதிகா, டென்னிஸ் அகாடமி நடத்தி வருவதில் தீபக்கிற்கு உடன்பாடில்லை.