
திருச்சி: சட்டப்பேரவைத் தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதால், 10, 12 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்பதுதான் கட்சியினரின் விருப்பம் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அரசியலில் தவறு நடப்பது இயல்புதான். செய்த தவறை (அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை) ஒப்புக்கொண்டு வைகோ பேசியுள்ளார். அந்தக் காலத்தில் மதிமுக வைத்த கூட்டணி வரலாற்றுப் பிழை. அதில் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது. ஆனால், எம்ஜிஆரையோ, ஜெயலலிதாவையோ கொச்சைப்படுத்தி பேசவில்லை.