• July 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டத்​தில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்ள 10 ஆயிரம் முகாம்​களை​யும் பொது​மக்​கள் பயன்படுத்திக் கொள்ள வேண்​டும் என முதல்​வர் மு.க. ஸ்​டா​லின் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். தமிழகத்​தில் உள்ள கடைக்​கோடி மக்​களுக்​கும், அவர்​கள் அன்​றாடம் அணுகும் அரசுத் துறை​களின் சேவை​கள், திட்​டங்​களை அவர்​கள் வசிக்​கும் பகு​திக்கே சென்று வழங்​கும் வகை​யில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ என்ற திட்​டம் தொடங்​கப்​பட​வுள்​ளது. இத்​திட்​டத்​தின் கீழ் நகர்​புறப் பகுதிகளில் 3,768, ஊரகப் பகு​தி​களில் 6,232 என 10 ஆயிரம் முகாம்​கள் நடை​பெற உள்​ளன.

அத்​துடன் முகாம்​களுக்கு வரு​கை​தரும் பொது​மக்​களின் உடல்​நலனைப் பேணும் வகை​யில், மருத்​துவ சேவை​களை வழங்க, மருத்​துவ முகாம்​களும் நடத்​தப்​படும். முகாம்​களில் பெறப்​படும் விண்​ணப்​பங்​கள் மீது 45 நாட்​களில் உரிய நடவடிக்கை மேற்​கொள்ள அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்​டத்​தில் விடு​பட்​ட​வர்​களுக்​கு, ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம்​களில் மட்​டுமே விண்​ணப்​பங்​கள் வழங்​கப்​படும் எனவும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *