• July 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘அ​தி​முக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பான மனுக்​கள் மீது எப்​போது முடி​வு எடுக்​கப்​படும் என கால​வரம்பை குறிப்​பிட்​டு, ஜூலை 21-ம் தேதிக்​குள் எழுத்​துப்​பூர்​வ​மாக விளக்​கம் தரவேண்​டும்’ என தேர்​தல் ஆணை​யத்​துக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: அதி​முக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பாக அளிக்​கப்​பட்ட புகார்​கள் மீதான ஆரம்​பக்​கட்ட விசா​ரணையை நடத்தி முடிக்க தேர்​தல் ஆணை​யத்​துக்கு கால​வரம்பு நிர்​ண​யிக்க வேண்​டும். 2026 சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு தயா​ராக வேண்​டி​யுள்ள சூழலில், கட்சி விரோத நடவடிக்​கை​களில் ஈடு​படு​வோர், இதை தங்​களுக்கு சாதக​மாகப் பயன்​படுத்த வாய்ப்​பு உள்​ளது. இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *