• July 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் வரும் 15-ம் தேதி முதல் 3 நாட்​களுக்கு கோவை, நீல​கிரி மாவட்​டங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக​மாறு​பாடு காரண​மாக தமிழகத்​தில் இன்று ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். வரும் 11 முதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்​களி​லும், 16, 17-ம் தேதி​களில் சில இடங்​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். மேலும், 15 முதல் 17-ம் தேதி வரை நீல​கிரி மற்​றும் கோவை மாவட்​டத்​தின் மலைப் பகு​தி​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. தமிழகத்​தில் இன்​றும் நாளை​யும் சில இடங்​களில் அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்​தை​விட 7 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை அதி​க​மாக இருக்​கக்​கூடும். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *