
சென்னை: ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மனைப்பிரிவுகளில், பொது ஒதுக்கீடு இடங்கள் அதன் உபயோகங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய, நகர ஊரமைப்பு இயக்குநர் பா.கணேசன் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: விரிவான மனை அபிவிருத்தி திட்டங்கள் தயாரிக்கப்படும்போது, ஒப்புதல் அளிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் உள்ள பொது ஒதுக்கீடு இடங்கள், விரிவான அபிவிருத்தி திட்டங்களின் பொது ஒதுக்கீடாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பொது ஒதுக்கீடு இடங்கள், நகர ஊரமைப்பு சட்டத்தின்கீழ் கையகப்படுத்தப்படவில்லை என்று நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாவட்டநகர ஊரமைப்பு அலுவலகம் மூலம் அந்த இடங்கள் விடுவிக்கப்படுவது தெரியவருகிறது.