
சென்னை: மனை பட்டா உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என விசிக நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முகநூல் நேரலையில் அவர் பேசியது: "புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், 3 மாவட்டச் செயலாளர்களை தவிர்த்து விட்டு ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டத்தை நடத்துவதாக அறிகிறேன். இது கட்சி விதிகளுக்கு முரணானது. மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. இதை முன்னனி நிர்வாகிகள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் புகார் பரிசீலனையில் இருக்கிறது.