
திருநெல்வேலி: “மாநில ஆளுநர்களின் அதிகாரங்களில் முதல்வர்களின் தலையீடு இருக்கக் கூடாது” என்று மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாளையங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 268-வது குருபூஜையை விழாவையொட்டி அவரது சிலைக்கு சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக பாஜக நிர்வாகிகள் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.