
புவனேஸ்வர்: நாட்டில் காங்கிரஸ் உருவாக்கிய 160 பொதுத் துறை நிறுவனங்களில், 23 நிறுவனங்களை மோடி அரசாங்கம் விற்றுவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே, "மத்தியிலும் ஒடிசாவிலும் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது, இங்கு பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. என்டிபிசி, நால்கோ, பாரதீப் துறைமுகம், ஹிராகுட் அணை, ரூர்கேலா எஃகு ஆலை, சில்கா கடற்படை அகாடமி, மஞ்சேஸ்வரில் ரயில் பெட்டி தொழிற்சாலை ஆகியவை காங்கிரஸ் அரசு ஒடிசாவுக்குச் செய்த திட்டங்களில் முக்கியமானவை.