
ஜம்மு: தெற்கு காஷ்மீரில் இமயமலையில் கடல் மட்டத்தில் இருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயில் உள்ளது. அங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்த ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம், கந்தர்பால் மாவட்டத்தில் பல்தல் ஆகிய இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான யாத்திரையை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கடந்த 2-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுவரை சுமார் 1.28 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.