
தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு எதிராக சொந்தக் கட்சியினர் எழுப்பி வந்த சங்கநாதம் சற்றே ஓய்ந்திருக்கும் நிலையில் அடுத்த ரோதனையாக, பன்னீர்செல்வம் வேடிக்கையாக பேசிய பேச்சு தருமபுரி மாவட்ட பாமக-வினரை அவருக்கு எதிராக தகிக்க வைத்திருக்கிறது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தின் கீழ் தருமபுரியில் 8 கிலோ மீட்டர் தூர நடைபயிற்சிக்கான பாதையை அமைத்துத் தந்துள்ளார்.