
சென்னை: “தமிழில் அர்ச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர். பகட்டுச் சம்பிரதாயங்களைத் தவிர்த்தவர். மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர்.” என்று தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் அவரைப் புகழ்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், ”தமிழில் அர்ச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர். சமூகநீதித் தளத்தில், தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் எனத் திராவிட இயக்கத்துக்குத் துணையாக நின்ற மாண்பாளர்.