
விகடன் பிரசுரத்தில், எம்.பி சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களில் வெளியாகி மக்களின் மனதைக் கவர்ந்த புத்தகம் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’.
இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது. இதனைக் கொண்டாடும் விதமாக இப்புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா இன்று (ஜூலை 11) மாலை 5.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆனந்த விகடன் நிர்வாக இயக்குநர் திரு பா. சீனிவாசன் வரவேற்புரை ஆற்ற இருக்கிறார். தொகுப்பாளர் கோபிநாத், திரைக்கலைஞர் ரோகிணி, தமிழ்நாடு அரசு நிதித்துறைச் செயலாளர் திரு. த. உதயச்சந்திரன், திரைப்பட இயக்குநர் ஷங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்க இருகின்றனர்.
‘வேள்பாரி 1,00,000’ வெற்றிச் சின்னத்தைத் திறந்துவைத்து சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் சிறப்புரை ஆற்ற இருக்கிறார். இந்நாவலைப் படைத்த எழுத்தாளர் எம்.பி திரு.சு. வெங்கடேசன் வெற்றி விழா உரை ஆற்ற இருக்கிறார்.