
சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவருடைய சொத்து விவரங்களை முழுமையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அந்நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.