
மதுரை: தேனி வனப் பகுதியில் ஆக.3-ல் ஆடு, மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். மதுரை மாவட்டம் விராதனூரில் ‘மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை’ என்ற பெயரில் ஆடு-மாடுகள் மாநாடு நேற்று நடைபெற்றது.
இதில் சீமான் பேசியதாவது: ஆடு, மாடுகள் எங்களின் செல்வங்கள். எங்கள் வாழ்க்கை, கலாச்சாரத்துடன் இணைந்து வாழும் உயிரினங்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் உறவினர்போல ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறோம். காடும், காடு சார்ந்த இடங்களில் வாழ்ந்த ஆடு, மாடுகள், தற்போது அதே காட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை உடைக்க வேண்டும்.