
ராமேசுவரம்: ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தலைமன்னார் அருகே வலைகளை வெட்டி விரட்டியடித்தனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர். நள்ளிரவில் மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்தாகக் கூறி 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்து வலைகளை கடலுக்குள் வெட்டி எறிந்தனர்.